விண்ணை நீ தொடுவதற்காய்
மண்ணில் எங்களை வீழ்த்துகிறாய்..
வெயிலுக்கு நிழல் தந்தேன்
தீயால் எங்களை எரிக்கின்றாய்..
பசிக்கு உணவு தந்தோம்
தேவைக்காய் எங்களை அழிக்கிறாய்..
சுவாசிக்க தரும் காற்றை
மாசாக்கி எங்கள் மூச்சடைத்து
நீரையும் மண்ணையும் நஞ்சாக்கி
எங்களை பட்டுப்போக செய்கிறாய்..
நன்றி எதிர்பாராமல் செய்திருக்கின்றோம்
நன்மைகள் பலவற்றை நாங்கள்!!
நன்றி மறப்பது நன்றன்று
என்று பெயருக்கு சொல்லாமல்
வாழவிடுவாயா மனிதா நீ
பூவுலகில் எங்கள் சந்ததியரை??
தினந்தோறும் அழிக்கப்படும்
காடுகளுக்காய் ஒரு குரல்!!!!

No comments:
Post a Comment