தொடர்பவர்கள்

Tuesday, 7 May 2013

எதுக்குடா எழுதியிருக்க????



எத்தனையோ நல்ல நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் படிப்பதை விட்டு விட்டு உன்னை போன்ற கழிசடை எழுதுவதை ஏண்டா படிக்கணும் என்ற உங்களின் கோபம் புரிகிறது.

முன்பெல்லாம் யாருக்கேனும் எழுத்தார்வம் இருந்தால், தங்களின் படைப்புகளை பல்வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, பதிப்பாசிரியரின்  கடிதத்திற்காக பிரசவ அறையின் முன் காத்திருக்கும் கணவன் போல காத்திருந்த காலம் மலையேறிவிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் விரல்நுனியின் சிறு தட்டலிலேயே உலகெங்கும் பதிப்பிற்கும் வசதி வந்த பிறகு என்னை போன்றவர்களும் எழுத தொடங்கியாகிவிட்டது.என்னை நானே ஏன் விமர்சிக்கக்கூடாது என்று தோன்றியதால்,  இதனை எழுதுகிறேன். இது ஒரு விதமான சுயவிமர்சனம்.

மனித மனம் படு மோசமானது. அது தன்னுடைய சுயநலத்தினையே பெரும்பாலான நேரங்களில் முன்னிறுத்திக்கொள்ளும். எந்த ஒரு மனிதனுக்குமே “தான்” என்ற எண்ணம் இல்லாமல் இல்லை. அதே போன்று மற்றவர் முன்னே தன்னை முன்னிறுத்தி கொள்ளும்படி செய்வதற்கான முயற்சிகளை இடையிராது  செய்துகொண்டிருக்கும். நமது அன்றாட செயல்களை நாம் ஆராய்ந்தாலே நம்மை பற்றி நமக்கு தெரிய வரும்.

பக்கத்து வீட்டுக்காரனை விட நாம் ஒருபடி மேலே இருக்க வேண்டும், நம் உடன் பிறந்தோரை விட வசதிகளில் அதிகமாக இருக்கவேண்டும், நம்மை தெரிந்தவர்களெல்லாம் நம்மை பற்றி வாய் பிளந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும், பணியிடத்தில், சுற்றத்தார், உடன்பிறந்தோர், இவ்வாறாக பலரும் நம்முடைய சாதனைகளையும், வளர்ச்சியையும் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும், நம்மை பிரமிப்பாக பார்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்காத ஆட்களே இல்லை என்று கூறலாம். (நம் பின்னால் நம்மை பற்றி என்ன பேசினால் என்ன?, நமக்கு முன்னால் நம்மை போற்றினால் போதாதா?? என்று நினைக்காதவர் யாரும் உண்டா??)

இதற்கெல்லாம் அடிப்படை, ஒரு அங்கீகாரத்திற்காக எப்போதும் ஏங்கிக்கொண்டிருக்கும் மனித மனமே. தொட்டிலில் அழும் இளைய குழந்தையை கவனிக்கும் போது, கவனத்தை ஈர்ப்பதற்க்காக சும்மாவே அழும் இன்னொரு குழந்தையாய் இருக்கும் போதே இது தொடங்கிவிடுகின்றது. பின் பருவ வளர்ச்சிக்கு ஏற்ப நாம் விரும்பும் அங்கீகாரத்திற்கான அளவுகோலும், அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளும் மாறி விடுகின்றது. இப்படியாக ஒரு அங்கீகாரம் அடைய நான் செய்யும் முயற்சியாகவே நான் எழுதுவதை பார்கின்றேன்!!!
எல்லாம் சரி அது என்ன ஆனந்தம் என்று பேர் வைத்திருக்கிறாய் என்று என்னை நன்றாக அறிந்த நண்பர்களின் மனதில் உள்ள கேள்வி எனக்கு கேட்கிறது!!!

 உன்னை தெரிந்த நாட்களில் இருந்தே ஒரு விதமான மன அழுத்தத்தில் தானே (depression னிற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை, மனோதத்துவ நண்பர் யாரேனும் இதனை வாசித்தால் தெளிவு படுத்தவும்.) இருந்திருக்கிறாய், அதென்ன பேரில் மட்டும் ஆனந்தம் வேண்டியிருக்கிறது என்று கேட்க தோன்றுகிறதா நண்பர்களே?? இதோ அதற்கும் பதில் வைத்துள்ளேன்.
எல்லாம் ஒரு  Positive reinforcement வேண்டிதான்.
அத்துடன் பிரசுரிக்க யார் தயவும் தேவையில்லை என்பதோடு, என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கருத்துசுதந்திரமும் என்னை எழுதவைத்துவிட்டன.

 மற்றபடிக்கு நான் வாந்தி எடுக்கும் அனைத்தையும் படித்து விட்டு, திட்ட வேண்டும் என்று தோன்றினால் மறக்காமல் திட்டவும். பரம்பரையே காலி செய்யும் அளவுக்கு கோபம் வந்தால், தனியாகவும், இல்லை என்றால் பொதுவிலும் தாராளமாக திட்டலாம்!!!!

  




3 comments:

  1. வெகு நாட்களாக எதாவது எழுது என்று ஊக்கபடுத்திய தோழியை பற்றி நான் இதில் குறிப்பிடாதது கூட ஒரு வகை தன்னலம் தான் போலும்!!!

    கடைசியாக உன்னை பற்றி குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்( உனக்கு பிடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை)

    ReplyDelete
  2. arumai inbaa...thamizhil pathivu kooduthal suvai...waiting for more :)

    ReplyDelete
  3. ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
    home appliance
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete